சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் அழகு குறிப்புகள்!

முகத்தை அழகு செய்வது என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு செயலாகும் அதில் அதிக செலவின்றி வீட்டிலேயே செய்யலாம் என்றால் அனைவருக்கும் ஒரு வகை விருப்பமே அவ்வகையான ஒரு ப்ளீச்சிங் செய்யும் முறையை இப்பொழுது பார்க்கலாம்.
பீலிச் செய்வதால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.
பீஜிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தை பெற முடியும் ஏனெனில் சருமம் கருமையாக காணப்படும் தான் காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் மூலம் அத்தகைய அழுக்குகளும் பிரச்சனைகளையும் பிலிச் செய்வதன் மூலம் உடனே போகலாம்.
1டேபிள் ஸ்பூன் தேனில் 1 1/2 ஒன்றரை டேபிள்ஸ்பூன் க்ரீம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி நன்கு உலரவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
ஒரு சிட்டிகை மஞ்சள் தூளில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி நன்கு காய வைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.
2 டேபிள் ஸ்பூன் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கலந்து முகத்தில் தடவி காயவைத்து பின்னர் நீரில் கழுவ வேண்டும்.
ஒரு பவுலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து முகத்தில் தடவிஇங்கு உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும் இதனால் எந்தவித பக்க விளைவும் இல்லாமல் பளிச்சென்ற முகத்தைப் பெறலாம்



