\
Health

இவ்வளவு மருத்துவத்தன்மை உண்டா இந்தக் கிராம்பில்!

கிராம்பை பொடி பொடியாக்கி அதை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர வாய் நாற்றம் ஈறு வீக்கம் பல்வலி ஆகியவை குணமாகும் கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்

உடலைப் பருமடையச் செய்யவும் வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும் சுட்டை சமப்படுத்தவும் ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும் தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளி தேன் உடன் சேர்த்து வெள்ளைப் பூண்டு சாறு எடுத்து பருகும் பொழுது ஆஸ்துமா சுற்றுசூழல் அலட்சிய சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us