
தசைபிடிப்பு : காரணம் & சிகிச்சை
தசைபிடிப்பானது பெரும்பாலான நேரங்களில் கால்களிலேயே ஏற்படும். தசைபிடிப்பு ஏற்படும் போது நம்மால் இரண்டு அடி கூட நகர இயலாது , தசைபிடிப்பானது சில விநாடிகள் முதல் நிமிடக் கணக்கில் நீடிக்கும். தசைபிடிப்பு நீங்கினாலும் அந்த இடத்தில் ஒரு சில மணி நேரங்கள் முதல் நாட் கணக்கில் வலியின் தாக்கம் இருக்கும். தசைபிடிப்பானது தானாகவே சரியாகக் விடும். ஆனால் அடிக்கடி தசைபிடிப்பு ஏற்பட்டு , வலி தொடருமானால் நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
காரணங்கள் :
கால்களில் ஒரு தசையை அதிகளவு பயன்படுத்தி உழைக்கும் போது தசைபிடிப்பு ஏற்படும். வியர்வை மூலம் உடலில் திரவங்களை இழப்பது அல்லது ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமருவது தசைபிடிப்பிற்கான காரணிகளாக அமைகின்றன. இவை மட்டுமே காரணங்கள் என்றும் கூற முடியாது.
ரத்த ஓட்டத்தில் தடை : தீவிரமாக உடற்பயிற்சி செய்யும்போது கால்களுக்கு ரத்தத்தை கொண்டும் வரும் தமனிகள் குறுகலாகி தசைபிடிப்பு ஏற்படும். அப்போது உடனடியாக உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால் தசைபிடிப்பு போய்விடும்.
நரம்புச் சுருக்கம் : முதுகுத்தண்டில் உள்ள நரம்புகளின் அதிக அழுத்தம் ஏற்படும் போதும். அப்போது நீங்கள் நடந்தால் வலி மேலும் மோசமாகிவிடும். சற்று முன்னோக்கி வளைந்து நடப்பதன் மூலம் தசைபிடிப்பை குறைக்கலாம்.
உடலில் கணிம குறைபாடு : உண்ணும் உணவில் பொட்டாசியம் , மெக்னீஸியம் , கால்சியம் மிகக் குறைவாக இருந்தால் தசைபிடிப்பு ஏற்படும். அதே நேரத்தில் அதிக ரத்த கொதிப்பிற்கு நீங்கள் உட்கொள்ளும் மாத்திரைகளால் அதிகளவு சிறுநீர் கழிக்க நேரிடும் . இதன் மூலமாகவும் உடலில் உள்ள கணிமங்கள் குறையலாம்.
- முகம் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணிப்பாருங்க !
- ஆரோக்கியமான மனமும், உடலும் இருக்க வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்க!
- திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்
- காலை எழுந்ததும் இந்த விஷயங்களை செய்துப்பாருங்க உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் !
- அசைவம் ஏன் சாப்பிடக் கூடாது கோவிலுக்கு செல்லும் நாளில் !
தசைபிடிப்பை அதிகரிக்க கூடிய காரணிகள் :
இயல்பாகவே மனிதர்கள் வயதான காலத்தில் தசையை இழப்பார்கள். அப்போது தசைகளின் செயல்பாடு கடினமாகி அதிக அழுத்தம் உண்டாகும்.
ஒரு வேலையைச் செய்யும்போது , அதற்கான முழு வடிவத்தில் இருப்பது அவசியம். அப்படி இல்லையென்றால் தசைகள் எளிதாகத் தளர்ந்து விடும்.
வெப்பமான காலநிலையில் தடகள வீரர்கள் விளையாடும் போதோ அல்லது கடின பயிற்சி மேற்கொள்ளும் போதோ அதிக வியர்வை உண்டாகி சோர்வடைவதுடன் தசைபிடிப்புகளும் எளிதாக ஏற்படும்.
கருவுற்றிருக்கும் காலத்திலும் தசைபிடிப்பு ஏற்படும்.நீரிழிவு அல்லது நரம்பு, கல்லீரல் ரீதியான பாதிப்புகள் மற்றும் தைராய்டு சம்பந்தப்பட்ட நோய்கள் தசைபிடிப்பு அபாயத்தை அதிகரிக்கும்.
அதிக உடல் எடையுடன் இருப்பது கூடத் தசைபிடிப்பு ஏற்படுவதற்கான காரணமாகும்.
தற்காப்பு :
இவற்றைப் பின்பற்றினால் தசைபிடிப்பை தவிர்க்கலாம்.
அதிகளவு தண்ணீர் அருந்துவது : தசைகள் நன்றாக வேலை செய்வதற்கு திரவங்கள் தேவைப்படுகின்றன. அதனால் அதிகளவு தண்ணீர் அல்லது கால்சியம் , மெக்னீஸியம், பொட்டாசியம் அடங்கிய திரவங்களை அருந்துவது நல்லது. ஆனால் காஃபீன், மது அருந்தக் கூடாது. எலுமிச்சை சாறு , குளூகோஸ் , சிறிதளவு உப்பு கலந்த தண்ணீர் ஆகியவற்றை அருந்தலாம்.
தசை பயிற்சி : கை, கால்களுக்குரிய ஸ்ட்ரெட்சிங். இரவு நேரத்தில் தூங்கும்போது தசைபிடிப்பு ஏற்படுவதை தவிர்க்கக் கட்டிலில் ஸ்ட்ரெட்சிங் செய்யலாம். தினமும் சிறிது நேரம் சைக்கிள் ஓட்டுவதன் மூலமாகவும் தசைபிடிப்பிலிருந்து தப்பிக்கலாம்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
