முகம் பளப்புடன் இருக்க இத ட்ரை பண்ணுங்க ?

ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் அழகை விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். குறிப்பாக பெண்கள் தங்களுக்குத் தெரிந்த சில அழகுக்குறிப்புகளைப் பயன்படுத்தி முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள். ஆனால் இவை அனைத்துக் காலக்கட்டங்களிலும் எடுபடாது. 30 வயதிற்குப் பிறகு சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். தோலின் துளைகள் பெரிதாகத் தொடங்கும் என்பதால் சருமம் தளர்வான தோற்றத்துடன் இருக்கும். இதை அப்படியே விட்டுவிடும் பட்சத்தில் முகத்தில் அதிக சுருக்கங்கள் வர ஆரம்பித்து வயதான தோற்றத்தைப் பெறக்கூடும். முகம் பளபளப்பு தன்மையை இழக்க நேரிடும்.
எனவே முறையான சரும பராமரிப்புகளைப் பின்பற்றினாலே பெண்கள் எப்போதும் தங்களுடைய முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கும். இதோ உங்களுக்கான டிப்ஸ் இங்கே…
தண்ணீர் குடித்தல்:
எந்த பருவக்காலங்களிலும் உங்களது சருமம் வறண்டு போகாமல் இருக்க வேண்டும் என்றால், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். நமது உடலில் 70 சதவீதம் வரை நீர் தேவை என்பதால் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது தவிர உங்களது சருமத்திற்கு கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர் போன்றவற்றையும் பயன்படுத்தவும்.
மாய்ஸ்சரைசர்:
பெண்கள் தங்களுடைய சருமம் எப்போதும் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சருமம் வறண்டு விடுவதோ, பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு மாய்ஸ்சரைசர் சிறந்த தீர்வாக அமையும். இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைத்து முக சுருக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- முகம் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணிப்பாருங்க !
- ஆரோக்கியமான மனமும், உடலும் இருக்க வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்க!
- திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்
- காலை எழுந்ததும் இந்த விஷயங்களை செய்துப்பாருங்க உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் !
- அசைவம் ஏன் சாப்பிடக் கூடாது கோவிலுக்கு செல்லும் நாளில் !
வைட்டமின் சி:
முதுமைக்கு எதிராக பெண்களுடன் போராடுவதில் வைட்டமின் சி முக்கியமான ஒன்றாக உள்ளது. இரவில் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னர் வைட்டமின் சி உள்ள சீரம், ஜெல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இது சருமத்தை எப்போதும் இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆவி பிடித்தல்:
பெண்கள் அனைவராலும் ப்யூட்டி பார்லர்களுக்குச் சென்று தங்களை அழகுப்படுத்திக் கொள்ள முடியாது. வீட்டில் இருந்தப்படியே உங்களது சருமத்தைப் பாதுகாக்க முடியும்.
நொச்சி, வேப்பிலை, குப்பைமேனி போன்ற மூலிகைகளை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்கும் போது சருமத்தில் பாக்டீரியாக்களை அழிக்கிறது. சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளமுடியும். வாரத்திற்கு இருமுறைப் பயன்படுத்தினால் சிறந்ததாக அமையும்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
