
நவராத்திரி ஆரம்பமாகிவிட்டது…. நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளை குறிக்கும். உலகத்தையும் உலக மக்களையும் காக்கும் பொருட்டு அம்பாள் தீய சக்திகளுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் நாட்கள் நவராத்திரி எனப்படும். இந்த ஒன்பது நாட்களும் விபத்துகளும் கண்டங்களும் அதிகமாக இருக்கும். அம்பாளை வழிபடுவதால் அனைத்து தீங்குகளிலிருந்தும் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம்.
முப்பெரும் தேவிகளான அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோரை மூன்று நாட்கள் வீதம் ஒன்பது நாட்கள் வழிபாடு செய்யாப்படுகிறது. அம்பாளின் அவதாரம்: உலக நன்மைக்காக ஐந்து முறை அம்பாள் அவதரித்துள்ளாதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
முதலாவாதக மஹாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் போது விஷ்ணுவின் நாபியிலிருந்த பிரம்மவிற்குப் பிரசன்னமாகி அவருக்குத் தெளிவையும், சிருஷ்டிக்கும் வல்லமையையும் கொடுத்தாள். இரண்டாவதாக மஹாவிஷ்ணுவின் மூலமாக மோகினியாக அவதாரம் எடுத்தாள். ‛‛தொகுதி குறைக்க கூடாது’’ சோனியாவிடம் அழுத்திய தலைகள்! பரபர கார்த்தி சிதம்பரம்..
திரும்பும் திமுக தாட்சாயிணி, பார்வதி மூன்றாவதாக தட்சனின் புதல்வியாக தாட்சாயணி என்னும் பெயருடன் அவதரித்தாள்.. நான்கவதாக சிவபெருமானை திருமணம் புரிவதற்காக பார்வதி தேவியாக அவதாரம் எடுத்தாள். ஐந்தாவாதக பண்டாசுரனை அழிப்பதற்காக லலிதாம்பாள் என்னும் திருப்பெயருடன் ஸ்ரீசக்கரம் என்ற ரதத்தில் அவதாரம் எடுத்தாள். அபுதாபியில் தவித்த 28 தமிழர்கள்!
உதவிக்கரம் நீட்டிய அய்மான் சங்கம் +வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்! பூஜை செய்யும் முறை: நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம். நவராத்திரியில் சுமங்கலிகளையும் 10 வயதிற்குட்பட்ட கன்னிப் பெண்களையும் பூஜித்து வணங்குவது சிறப்பு. யாருடைய பாவத்தையும் இனி சுமக்க வேண்டியதில்லை.. Relief கிடைச்சிடுச்சி! அப்பாடா.. சி.வி.சண்முகம் அன்னைக்கு அலங்காரம் அனைத்து கோவில்களிலும் பொதுவாக பின்வரும் வடிவங்களில் அலங்காரம் செய்யப்படுகிறது துர்கை, பத்திரகாளி, அம்பாள், அன்னபூரணி, பைரவி, சாமுண்டி, லலிதா, பவானி, மூகாம்பிகை ஆகும்.
ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவியின் அருள் வேண்டி தங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றுடன் புதிதாக வாங்கப்பட்ட புத்தகங்களையும் வைத்து பூஜை செய்ய வேண்டும். வெற்றி தரும் விஜயதசமி மறுநாள் விஜயதசமி அன்று மறுபூஜை செய்து தொழில் துவங்கினால் அவ்வருடம் முழுவதும் செய் தொழில் வளம் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
