ரோஜாவுக்கு இத்தனை மருத்துவ குணங்களா!

ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியை தரக்கூடியது இதயத்தை வலுவாக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினையை நிறுத்தும்.
ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு காயவைத்து சம அளவு பைதம்பரை அதனுடன் சேர்த்து 45 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி நேரம் பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.
ரத்த விருத்தி உண்டாகும் ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
ரோஜாப்பூ மூக்கு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும் மூன்று மணி நேரம் கழித்து இதை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்
ரோஜாவை பச்சையாகவும் காயவைத்தும் பயன்படுத்தலாம் ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும் அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் சுலபமாகப் போகும்.
பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் மயக்கம் வாய்க்கசப்பு நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவை கசாயம் செய்து பாலுடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பருகினால் குணமாகும்.
ரோஜா பூவினால் தயார் செய்யப்பட்ட குல்கந்து மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி வைத்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் இரத்தபேதி பித்தக் கோளாறுகள் முதலிய பிணிகள் விலகும்.
ரோஜா இதழ்களிலிருந்து சர்பத் தயார் செய்யலாம் இதை அருந்தினால் மூலச்சூடு மலச்சிக்கல் உடலில் உண்டாகும் புண் இவைகளைக் குணப்படுத்தும்.



